முல்லையின் நினைவுகள் ........
இந்த இடம் என்னுடே மட்டும் அல்லாமல் என் தோழர்கள் படைப்பையும் எழுத விரும்புகிறேன் ...
Tuesday, August 31, 2010
மௌனம்....
என் மௌனம் ஆயிரம் மொழி பேசும்…
அது புரிந்தவர்களுக்கு மொழி புரியாதவர்களுக்கு வலி……
Saturday, August 28, 2010
ரசிகன்.....
என் முதல் ரசிகன் நீ...
பெருமிதம் கொள்ள கூட நெஞ்சு மறுக்கிறது..
காரணம்...
...என் கிறுக்கல்கள் கூட உனக்கு கவிதையாக தெரிந்து இருக்கிறது...
Friday, August 27, 2010
இதயம்....
நனைய
மறந்த
மழைத்துளி
..
கோர்க்க
முடியாத
பனித்துளி
..
சேர்க்க
முடியாத
மழலை
சிரிப்பு
.
பார்க்க
முடியாத
மொட்டுவிழும்
பொழுது
..
கைக்குள்
அகப்படாத
தென்றல்
காற்று
..
எல்லாவற்றிற்கும்
மேலாக
வெல்ல
முடியாத
உன்
இதயம்
..
எப்போதும்
வெற்றிடமாய்
நான்
..
Thursday, August 26, 2010
முத்தம்.....
முத்தம் என் காதலை முத்தமாய் உன்னிடம் சொல்வேனடா.... என் காதலின் ஆழத்தை அந்த முத்தத்தில் சொல்வேனடா....
தொலைப்பேசி.........
உன்
அழைப்புக்காக
ஏங்கி
...
கதறி
கதறி
அழுகிறது
என்
தொலைபேசி
கூட
....
கலங்கி
நிற்கும்
மனதையும்
....
கண்ணீர்
விடும்
கண்களையும்
தவிர
...
அதற்கு
பதில்
சொல்ல
வேறு
உறுப்புகள்
இல்லை.............
Wednesday, August 25, 2010
அன்பே....நீயிருந்தால் ....
"அன்பே..! ஆறுதல் கூற நீயிருந்தால்
நான் அழுது கொண்டேயிருப்பேன்!
தலைக்கோதி உச்சந்தலை முத்தமிட நீயிருந்தால்
துன்பத்தில் வாடிக்கொண்டேயிருப்பேன்!
தாலாட்டில் தாயாய் தனிமையில் கணிகையாய் தடியூன்றுகையில் சேவகியாய்
நீயிருந்தால் ........
பிறந்து,பிறந்து மரணத்தை முத்தமிடுவேன்!"
தவமும் வரமும் ........
உன்னுடன்
வாழ்வதற்கும் ,
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும்,
ஒரு-சிறு வித்தியாசம் தான்...,
உன்னுடன் வாழ்வது --"வரம்"
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்"
என்றும் உன் நினைவுகளுடன் நான்...........
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)