Sunday, September 12, 2010

மொழி....

இரு இதயம் மட்டும் பேசுகின்ற
கடவுள் தந்த அன்பு மொழி
ஒன்றை ஒன்று விட்டகலா
ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற
அன்பு என்னும் ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம் காதல் மொழி
எத்தனை ஆண்டு, எத்தனை தூரம்
எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும்
அத்தனை நாளும் என்னிதயம்
உன்னை நினைத்துக் கவிபாடும்
அன்பில் பிறந்த நட்பு இது
பண்பில் வளர்ந்த காதல் இது
எத்தனை தடைகள் வந்தாலும்
தூள் தூளாக உடைத்தெறியும்....

No comments:

Post a Comment