Thursday, December 6, 2012

கவிதை....



உன்னைப் பார்த்ததும்ஒரு கவிதை...
நீ என்னுடன் பேசியதும்  எழுதினேன் சில கவிதைகள்.
உன் நினைவுகள், தாலாட்டும் நேரங்களில், எழுதினேன் பல கவிதைகள்.
இன்று, நீ என்னை பிரிந்து சென்றதும்... எழுதுகிறேன் கோடான கோடி கவிதைகள்   அதனால்தானட!
இன்னும், இன்னும் ... அதிகமாய், உன்னை நேசிக்கிறேன்.
நான் கவிதைகளை அதிகம் காதலிப்பதால்.

Monday, November 19, 2012

மழைத்துளி



நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டுவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..

முகம்






















Thursday, November 8, 2012

அம்மா



புரண்டு படுத்தால்
நாம் இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன்

" அம்மா "