Wednesday, September 29, 2010

நீயாக வேண்டும்....

உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்
உன் ஆடையாய் மாறி,
உன் அழகாய் பாதுகாக்க வேண்டும்
உன் கண்ணீராய் மாறி,
உனக்காக அழ வேண்டும்
உன் புன்னகையாய் மாறி,
உன் சந்தோசத்தை வெளிபடுத்த வேண்டும்
நான்நீயாய் மாறி,
நான் நீயாக வாழ வேண்டும்..
தென்றலாய் மாறி,
உன்னை கட்டி அணைக்க வேண்டும்...
மழையாய் மாறி,
உன் உடலுக்குள் புக வேண்டும்
உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்.....

Wednesday, September 15, 2010

இதயத்தின் இடைவேளி.....


இதயம் கூட இடைவேளி விட்டுதான் துடிக்கும்
அந்த இடைவேளி கூட உன்னை பற்றிதான் நினைக்கும்……..

Sunday, September 12, 2010

மொழி....

இரு இதயம் மட்டும் பேசுகின்ற
கடவுள் தந்த அன்பு மொழி
ஒன்றை ஒன்று விட்டகலா
ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற
அன்பு என்னும் ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம் காதல் மொழி
எத்தனை ஆண்டு, எத்தனை தூரம்
எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும்
அத்தனை நாளும் என்னிதயம்
உன்னை நினைத்துக் கவிபாடும்
அன்பில் பிறந்த நட்பு இது
பண்பில் வளர்ந்த காதல் இது
எத்தனை தடைகள் வந்தாலும்
தூள் தூளாக உடைத்தெறியும்....

Friday, September 3, 2010

தோல்வி....

தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவளை மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது
கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்"......